பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண பதில் ஜனாதிபதியின் புதிய வேலைத்திட்டம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண பதில் ஜனாதிபதியின் புதிய வேலைத்திட்டம்!

பொருளாதார அழுத்தத்தில் உள்ள மக்களின் சுமையை குறைக்கும் வகையில் எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கும் அவசர நிவாரண வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

இன்று (16) காலை அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

மேலும், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முன்வைக்கப்படும் நிவாரண வரவு செலவுத் திட்டத்தில் இருந்து மேலதிக நிதியை இதற்காக பயன்படுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கும், செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்கும் ஜனாதிபதி இந்தக் கலந்துரையாடலில் பணிப்புரை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.