நான் மிகுந்த அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளேன்! -ஜனாதிபதி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நான் மிகுந்த அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளேன்! -ஜனாதிபதி


"நான் மிகுந்த அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளேன்; இராஜினாமா கடிதத்தை விரைவில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பேன்" என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனக்கு தெரிவித்ததாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் கடிதம் சமர்ப்பிக்கபடாமல், அவர் பதவி விலகியதாக கருத முடியுமா என்பது குறித்து சட்ட ஆலோசனைகள் பெற்று வருவதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.

ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போது சபாநாயகர் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிடம் தனது இராஜினாமா கடிதத்தை ஜூலை 13 ஆம் திகதி இறுதிக்குள் அனுப்பி வைப்பதாக பல உறுதிமொழிகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.