'நோ டீல் கம' ஆர்பாட்டக்காரர்கள் போராட்டக்களத்தை அகற்ற முடிவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

'நோ டீல் கம' ஆர்பாட்டக்காரர்கள் போராட்டக்களத்தை அகற்ற முடிவு!


அலரி மாளிகைக்கு முன்பாக அமைந்துள்ள தமது போராட்டக் களத்தை அகற்ற போராட்டக்காரர்கள் முடிவு செய்துள்ளனர்.

கொழும்பு - கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பிரதமர் உத்தியோகபூர்வ மாளிகையான அலரி மாளிகைக்கு அருகில், ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட 'நோ டீல் கம' (No Deal Gama) என பெயரிடப்பட்டிருந்த குறித்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களை அகற்ற போராட்டக்காரர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, இன்றைய தினம் (21) போராட்டக்காரர்கள் அங்கிருந்து வெளியேற தீர்மானித்துள்ளனர்.

பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டதைத் தொடர்ந்து போராட்டக்கார்கள் குறித்த இடத்தை விட்டு செல்ல தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னர் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவி வகித்த வேளையில், 'மைனா கோ கம' எனும் பெயரில் குறித்த ஆர்ப்பாட்டக் களம் இயங்கி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.