கைப்பற்றப்பட்ட ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் இல்லம்! சொத்துக்கள் சேதம் மற்றும் கொள்ளை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கைப்பற்றப்பட்ட ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் இல்லம்! சொத்துக்கள் சேதம் மற்றும் கொள்ளை!


ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் இல்லம் ஆகிய இடங்களை போராளிகள் கைப்பற்றியதன் பின்னர், பெறுமதியான பல பொருட்கள் மற்றும் பழங்கால பொருட்கள் காணாமல் போயுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

அதில் மேலும் குறிப்பிடப்படுவதாவது,

சிலர் அங்குள்ள உடைமைகளை எடுத்துச் செல்லும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

அந்தக் கட்டிடங்களில் உள்ள குளியலறைகள், சமையலறைகள் மற்றும் இதர உபகரணங்களும் பெரிய அளவில் சேதமடைந்துள்ளன. 

கடந்த 09ஆம் திகதி, போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கட்டடம், பொதுமக்கள் பொருட்காட்சிக்கு திறக்கப்பட்டதையடுத்து, அதேநேரம், ஏராளமானோர் கண்டுகளித்தனர்.

இந்நிலையில், ஜனாதிபதி மாளிகை மீது தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர், தொல்பொருள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் சேதப்படுத்தப்பட்டதா அல்லது கொள்ளையடிக்கப்பட்டதா என்பதை மதிப்பிடுவதற்காக தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரிகள் குழு இன்று ஜனாதிபதி மாளிகைக்கு சென்றுள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.