
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அப்போது ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு வலியுறுத்தியும் இந்த பொதுப் போராட்டம் நடத்தப்பட்டது.
நாடு முழுவதிலும் இருந்து மக்கள் மேற்கொண்ட அமைதியான பொதுப் போராட்டங்களை ஒன்றிணைத்து கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பொதுப் போராட்டம் இன்று வரை 100 நாட்களாகத் தொடர்கிறது.
இந்தப் போராட்டத்தின் காரணமாக இலங்கையின் அரசியல் களத்தில் பல பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு அதன் உச்சக்கட்டத்தைக் குறிக்கும் வகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜூலை 14 ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்தார்.
அத்துடன் ஜூலை 9 ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடலில் பெருந்தொகையான மக்கள் ஒன்று கூடி மாபெரும் பொது மக்கள் போராட்டம் இந்நாட்டில் இதுவரை இல்லாத வகையில் அதிகளவான மக்களின் பங்கேற்புடன் நடைபெற்ற அமைதியான பொதுப் போராட்டமாக வரலாற்றில் இடம்பிடித்து சர்வதேச ரீதியாக பாராட்டப்பட்டது. (யாழ் நியூஸ்)