அடுத்த வாரமும் வரையறுக்கப்பட்ட எ‌ரிபொரு‌ள் விநியோகம்! வரிசையில் காக்க வேண்டாம்! -எரிசக்தி அமைச்சர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அடுத்த வாரமும் வரையறுக்கப்பட்ட எ‌ரிபொரு‌ள் விநியோகம்! வரிசையில் காக்க வேண்டாம்! -எரிசக்தி அமைச்சர்


பெற்றோல், டீசல் மற்றும் மசகு எண்ணெய் கப்பல்கள் இந்த வார ஆரம்பத்திலும் அடுத்த வாரமும் வருவதை உறுதி செய்த எரிபொருள் வழங்குநர்கள், வங்கி மற்றும் பிற காரணங்களுக்காக சரியான நேரத்தில் எரிபொருள் விநியோகிக்க முடியாது என்று தெரிவித்துள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இது குறித்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தனக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், அடுத்த எரிபொருள் தொகுதி துறைமுகத்தில் இருந்து இறக்கப்படும் வரை, பொது போக்குவரத்து, மின் உற்பத்தி மற்றும் தொழிற்சாலைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.

அடுத்த வாரம் முழுவதும் வரையறுக்கப்பட்ட டீசல் மற்றும் பெற்றோல் வரையறுக்கப்பட்ட எரிபொருள் நிலையங்களுக்கு விநியோகிக்கப்படும் என்றும் எரிபொருளுக்காக வரிசையில் நிற்க வேண்டாம் என்று பொதுமக்களை கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்தார்.

எரிபொருள் வருகைத் திகதியை உறுதிப்படுத்த முடியவில்லை எனவும் அடுத்த மசகு எண்ணெய்  தொகுதி வரும் வரை சுத்திகரிப்பு நிலைய செயல்பாடுகள் தற்காலிகமாக மூடப்படும் என்றும் குறிப்பிட்டார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.