குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சரணடைந்த மஹிந்த!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சரணடைந்த மஹிந்த!

  1. கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) சரணடைந்துள்ளார்.

மே 09 அன்று கொழும்பில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல்களில் சந்தேக நபராக கஹந்தகம குறிப்பிடப்பட்டிருந்தார்.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் மேலும் இருவருடன் இந்த வழக்கில் சந்தேகநபராக அவர் பெயரிடப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் சட்டமா அதிபர் நேற்று கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்ததையடுத்து அவர்கள் இந்த வழக்கில் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து மஹிந்த கஹந்தகம இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சரணடைந்துள்ளார்.

கஹந்தகம, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் பல ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) அரசியல்வாதிகள் மற்றும் விசுவாசிகள் அமைதியான போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல்களை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.