புகையிரத பெட்டிக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புகையிரத பெட்டிக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

ரம்புக்கனை புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகையிரதத்தின் பெட்டிக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் சனிக்கிழமை (11) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இயக்கத்தை தொடங்குவதற்கு முன்னர், சாரதி உதவியாளரின் வழக்கமான பரிசோதனையின் போது அதிகாலை 4:40 மணியளவில் ரயில் பெட்டிக்குள் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இறந்தவருக்கு சுமார் 60 வயது இருக்கும் என நம்பப்படுகிறது, அந்த நபர் வெள்ளை நிற சாரம் மற்றும் சிவப்பு கருப்பு கலந்த நீண்ட கை சட்டை அணிந்திருந்தார். நபர் தொடர்பில் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

உயிரிழந்தவரிடமிருந்து பொல்கஹவெலயிலிருந்து பண்டாரவளை வரையிலான புகையிரத பயணச்சீட்டும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.