
இயக்கத்தை தொடங்குவதற்கு முன்னர், சாரதி உதவியாளரின் வழக்கமான பரிசோதனையின் போது அதிகாலை 4:40 மணியளவில் ரயில் பெட்டிக்குள் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இறந்தவருக்கு சுமார் 60 வயது இருக்கும் என நம்பப்படுகிறது, அந்த நபர் வெள்ளை நிற சாரம் மற்றும் சிவப்பு கருப்பு கலந்த நீண்ட கை சட்டை அணிந்திருந்தார். நபர் தொடர்பில் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவரிடமிருந்து பொல்கஹவெலயிலிருந்து பண்டாரவளை வரையிலான புகையிரத பயணச்சீட்டும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். (யாழ் நியூஸ்)