பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினை பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவிப்பு !

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினை பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவிப்பு !

எதிர்வரும் திங்கட்கிழமை விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு வழிவகை செய்யும் வகையில் பதவி விலகுவது குறித்து பரிசீலிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதனையடுத்து, அது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூட்டத்தின் போது அறிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்கனவே பதவி விலகுவதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.