advertise here on top
Join YazhNews WhatsApp Community

புதிய பிரதி சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டார்!


நாடாளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியாம்பலபிட்டிய தெரிவாகினார்.

சிறிலங்கா சுதந்திரக்கட்சி சார்பில் பிரேரிக்கப்பட்ட ரஞ்சித் சியாம்பலபிட்டியை ஐக்கிய மக்கள் சக்தியும் ஆதரித்தது. அவருக்கு ஆதரவாக 148 வாக்குகள் அளிக்கப்பட்டன.

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் முன்மொழியப்பட்ட இம்தியாஸ் பாக்கீர் மார்க்காருக்கு ஆதரவாக 65 வாக்குகள் அளிக்கப்பட்டன. மேலும் 03 வாக்குகள் நிராகரிப்பட்டன.

பிரதி சபாநாயகருக்கான வாக்கெடுப்பு காலை 10.45 மணிக்கு ஆரம்பித்தது. மதியம் 12.30 மணிக்கு நிறைவடைந்தது.

வாக்கெடுப்பில் இரா.சம்பந்தன், விமல் வீரவன்ச உள்ளிட்ட 06 எம்.பிக்கள் கலந்து கொள்ளவில்லை.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.