மர்மமான முறையில் உயிரிழந்த தந்தை மற்றும் மகளின் சடலங்கள் மீட்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மர்மமான முறையில் உயிரிழந்த தந்தை மற்றும் மகளின் சடலங்கள் மீட்பு!


களுத்துறை, ஹீனடியங்கல பிரதேசத்தில் வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த இருவரின் சடலங்களை பொலிஸார் நேற்று (30) கண்டெடுத்துள்ளனர். 

உயிரிழந்தவர்கள் தந்தை மற்றும் மகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

களுத்துறை, ஹீனடியங்கல சிசில உயன பகுதியைச் சேர்ந்த 69 வயதான சமரசிங்க சுனில் ஜயசிங்க மற்றும் அவரது 33 வயது மகள் சசித்ரா ஹன்சமலி ஜயசிங்க ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர். 

குறித்த வீட்டில் பெற்றோரும் மகளும் தங்கியிருந்ததுடன், தந்தை நாற்காலியில் அமர்ந்திருந்ததாகவும், மகள் அறையில் தரையில் சடலமாக கிடப்பதாகவும் பொலிஸ் அவசர பதில் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பிரேதப் பரிசோதனையின் பின்னர் சடலங்கள் களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனை இன்று நடைபெறவுள்ளது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.