போலி கடவுச்சீட்டு வழக்கில் சிறை தண்டனை வழங்கப்பட்ட சஷி வீரவங்சவுக்கு பிணை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

போலி கடவுச்சீட்டு வழக்கில் சிறை தண்டனை வழங்கப்பட்ட சஷி வீரவங்சவுக்கு பிணை!


போலி கடவுச்சீட்டு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவங்ச பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவரது பிணை கோரிக்கை மனு கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (31) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போலி ஆவணங்களை கொண்டு, கடவுச்சீட்டை தயாரித்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்த வழக்கில், அவருக்கு 2 வருட சிறைத்தண்டனையும், ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்து கடந்தவாரம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கொழும்பு நீதவான் நீதிமன்றினால் வழங்கப்பட்ட உத்தரவை சவாலுக்கு உட்படுத்தி தமது சட்டத்தரணி ஊடாக சஷி வீரவங்ச மேன்முறையீடு செய்திருந்தார்.

குறித்த மேன்முறையீடு மனு தொடர்பான பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், சஷி வீரவங்ச இன்று நீதிமன்றில் முன்னிலையானார்.

இந்நிலையில் அவரை பிணையில் விடுவிப்பதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.