50,000 அமெரிக்க டொலர்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் நபரொருவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

50,000 அமெரிக்க டொலர்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் நபரொருவர் கைது!

50,000 அமெரிக்க டொலர்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் 36 வயதுடைய நபரொருவர் ராஜகிரிய வெலிக்கடையில் இன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோத உண்டியல் மற்றும் ஹவாலா பணப்பரிமாற்ற முறைகளில் ஈடுபடும் நபர்களை கைது செய்ய அதிரடைப்படை அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கடந்த வாரம், இலங்கை மத்திய வங்கி (CBSL) இலங்கை வசிப்பவர் வைத்திருக்கும் அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயத்தின் சட்ட வரம்பு குறித்த ஏற்பாடுகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தது.

இலங்கை குடியுரிமை பெற்ற ஒருவர் தம் வசம் வைத்திருக்கக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் சட்ட வரம்பானது 15,000 அமெரிக்க டொலர்களில் இருந்து 10,000 அமெரிக்க டொலர்களாக குறைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் அறிமுகப்படுத்தப்படலாம் என இலங்கை மத்திய வங்கி இன் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.