
சட்டவிரோத உண்டியல் மற்றும் ஹவாலா பணப்பரிமாற்ற முறைகளில் ஈடுபடும் நபர்களை கைது செய்ய அதிரடைப்படை அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கடந்த வாரம், இலங்கை மத்திய வங்கி (CBSL) இலங்கை வசிப்பவர் வைத்திருக்கும் அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயத்தின் சட்ட வரம்பு குறித்த ஏற்பாடுகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தது.
இலங்கை குடியுரிமை பெற்ற ஒருவர் தம் வசம் வைத்திருக்கக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் சட்ட வரம்பானது 15,000 அமெரிக்க டொலர்களில் இருந்து 10,000 அமெரிக்க டொலர்களாக குறைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் அறிமுகப்படுத்தப்படலாம் என இலங்கை மத்திய வங்கி இன் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். (யாழ் நியூஸ்)