ஆர்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு!! ஒருவர் பலி; ஏழு பேர் காயம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஆர்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு!! ஒருவர் பலி; ஏழு பேர் காயம்!


ரம்புக்கனையில் இடம்பெற்ற ஆர்பாட்டத்தின் போது, காயமடைந்த ஏழு ஆர்பாட்டக்காரர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கேகாலை வைத்தியசாலை உறுதிப்படுத்தியுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வைக் கோரி இன்று (19) அதிகாலை 1.30 மணி முதல், கண்டி - கொழும்பு ரயில் மார்க்கத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஏனையோர் ரம்புக்கனை - கேகாலை, குருநாகல் மற்றும் மாவனெல்ல வீதிகளை மூடி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

15 மணி நேரமாக இடம்பெற்ற ஆர்பாட்டத்தில் பொலிஸாருக்கும் ஆர்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் இடம்பெற்றதையடுத்து, ரம்புக்கனை பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் நடத்தியுள்ளனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.