ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியேறிய ஜனாதிபதி!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியேறிய ஜனாதிபதி!!


ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்று வரும் ஆர்பாட்டம் காரணமாக ஜனாதிபதி தனது கடமைகளை கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்கு மாற்றியுள்ளார். 

ஜனாதிபதி தனது கடமைகளை ஜனாதிபதி மாளிகையில் இருந்து தற்காலிகமாக செய்கிறார். 

இதேவேளை ஜனாதிபதி செயலகத்திற்கு தேவையான பணியாளர்கள் குழுவொன்றும் அதற்கு அழைக்கப்பட்டுள்ளது.

 ஜனாதிபதி மாளிகையில் இருந்து ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி செயலக ஊடகப் பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.1

இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு வருமாறு,

தற்போதைய பிரச்சினைகள் தொடர்பான பல சுற்று கலந்துரையாடல்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (16) இடம்பெற்றன. 

நிதி அமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க, நிதித்துறை அமைச்சின் செயலாளர் கே.எம்.எம். சிறிவர்தன முதல் விவாதத்தில் கலந்து கொண்டனர். 

 நிதி, எரிசக்தி மற்றும் சுகாதார அமைச்சுக்களின் அதிகாரிகளுடன் மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெற்றது." (யாழ் நியூஸ்)

ஜனாதிபதி ஊடகப் பிரிவு 

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.