நாடளாவிய எ‌ரிபொரு‌ள் நெருக்கடிக்கு இதுவே காரணம்! இன்று முதல் தீர்வு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாடளாவிய எ‌ரிபொரு‌ள் நெருக்கடிக்கு இதுவே காரணம்! இன்று முதல் தீர்வு!

நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை இன்றைய தினம் (18) ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 

சிங்கள, தமிழ் புத்தாண்டு விடுமுறை காரணமாக எரிபொருள் ஏற்றிச் செல்வதற்காக போதிய எண்ணிக்கையிலான டேங்கர்கள் வராததால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இ.தொ.கா தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

நாளாந்தம் சுமார் 450 டேங்கர்கள் எரிபொருள் ஏற்றிச் செல்வதாகவும், நேற்று (17) 300க்கும் குறைவான டேங்கர்களே எரிபொருள் போக்குவரத்துக்கு பங்களித்துள்ளதாகவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 

எவ்வாறாயினும், எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகள் இன்று முதல் வழமை போன்று இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக சிபிசி தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டிற்கு வந்துள்ள 37,500 மெற்றிக் தொன் பெற்றோலுக்கான கொடுப்பனவுகள் இன்று செலுத்தப்படவுள்ளன. இதன்படி, அடுத்த இரண்டு நாட்களுக்குள் உரிய பெற்றோல் சரக்கு இறக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.