பிரதமர் பதவி விலகாமைக்கான காரணம் இது தான்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிரதமர் பதவி விலகாமைக்கான காரணம் இது தான்!!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்வதற்கான தீர்மானம் இரண்டு அமைச்சர்களின் தலையீட்டினால் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 4 ஆம் திகதி அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா செய்வதற்கு முன்னதாக பிரதமருடனான சந்திப்பின் போது பிரதமர் தனது முடிவை அறிவிக்கவுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க மற்றும் ஜோன்ஸ்டன் பிராணாண்டோ மற்றும் பலரது வற்புறுத்தலின் பேரில் பிரதமர் இந்த முடிவை மாற்றியுள்ளார்.

பிரதமர் பதவி விலகினால் தானும் அரசியலில் இருந்து விலகுவதாக பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

பிரதமர் தனது இராஜினாமா கடிதத்தை ஏற்கனவே தயார் செய்து கொண்டிருந்த நிலையில், இந்த நிலைமை காரணமாக இராஜினாமா செய்வது  நிறுத்தப்பட்டது.

பின்னர் பிரதமர் தவிர அனைத்து அமைச்சர்களும் இராஜினாமா செய்தனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.