நாளை (16) புதன்கிழமை இரவு 08.00 மணி முதல் 09.30 மணி வரை நாட்டின் எந்தப் பகுதிக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளைய தினம் இரவு 08.30 மணி முதல் விசேட அறிக்கையொன்றை பொதுமக்களுக்காக வெளியிடவுள்ளார்.
அதன்படி, நாளை இரவு 8.00 மணிக்கு மின்வெட்டு நிறுத்தப்பட்டு சில பகுதிகளில் இரவு 9.30 மணிக்கு மீண்டும் மின்வெட்டு அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)