advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாம் நேட்டோவுடன் இணையப்போவதில்லை! -உக்ரைன் ஜனாதிபதி


உக்ரைன் மீது ரஷியா இன்று 20 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. 


இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தும் வருகின்றன. ஆனால், போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைனின் தலைநகர் கீவ் நோக்கி ரஷிய படைகள் முன்னேறி வருகின்றன. 


மேலும், பொதுமக்கள் குடியிருப்புகள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் மீதும் தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது.


இதற்கிடையில், உக்ரைன் தலைநகர் கீவ்வில் இன்று இரவு (15) முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது. கீவ் முழுவதும் இன்று இரவு முதல் அடுத்த 36 மணி நேரத்திற்கு முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக நகர மேயர் தெரிவித்துள்ளார். ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை நெருங்கி வரும் சூழ்நிலையில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில், நேட்டோவில் உக்ரைன் இணையப்போவதில்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என நாட்டு மக்களுக்கு ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த தகவலை ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான ஸ்புட்னிக் வெளியிட்டுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.