பிரபல நடனக் குழுவொன்றின் நடனக் கலைஞரான யுவதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிரபல நடனக் குழுவொன்றின் நடனக் கலைஞரான யுவதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!


மஹரகம பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் யுவதியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


முதல் லேன் - ரயில்வே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறையினர்  தெரிவித்தனர்.


நாடளாவிய ரீதியில் நடைபெறும் இசைக் கச்சேரிகளில் பங்கேற்கும் பிரபல நடனக் குழுவொன்றின் தொழில்முறை நடனக் கலைஞராக இவர் பணியாற்றிவந்துள்ளார்.


26 வயதான குறித்த யுவதி குருநாகல் - அம்பகஸ்வெவ பிரதேசத்தை சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.


இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.


நிக்கவெரட்டிய பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவருடன் குறித்த யுவதிக்கு தொடர்பு இருந்துள்ளதாகவும், அது தொடர்பான பிரச்சினை காரணமாக இவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


சம்பவம் தொடர்பில் வாக்குமூலங்களை பதிவு செய்வதற்காக குறித்த வர்த்தகர் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக மஹரகம காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.