அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவு நாளை முதல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவு நாளை முதல்!


28 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவு வழங்கல், நாளை (14) முதல் ஆரம்பிக்கப்படுவதாக விடயத்துடன் தொடர்புடைய இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.


அநுராதபுரத்தில் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


இதன்படி, தற்போதுவரையில் 3,500 ரூபாவைப் பெற்ற சமுர்த்தி பயனாளர் குடும்பம் ஒன்றுக்கு, 4,500 ரூபா கொடுப்பனவு கிடைக்கப்பெறும்.


2,500 ரூபா கொடுப்பனவைப் பெற்ற குடும்பத்துக்கு 3,200 ரூபா கொடுப்பனவும், 1,500 ரூபா கொடுப்பனவைப் பெற்ற குடும்பத்துக்கு 1,900 ரூபா கொடுப்பனவும் கிடைக்கும்.


இதற்கமைய, எந்தவொரு சமுர்த்தி பயனாளியும், சமுர்த்தி வங்கி மூலம், நாளைமுதல் அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ள முடியும் என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.