தீமிதித்தல் நிகழ்வில் கலந்துகொண்ட பெண் உயிரிழப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தீமிதித்தல் நிகழ்வில் கலந்துகொண்ட பெண் உயிரிழப்பு!

கொழும்பு, ஆர்மர் தெரு பகுதியில் அமைந்துள்ள கோயிலின் வருடாந்த உற்சவத்தின் போது இடம்பெற்ற தீமிதித்தல் நிகழ்வில் கலந்து கொண்ட 26 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தின் போது பிள்ளையின் தாய் ஒருவர் காலில் தீக்காயம் அடைந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் கெசல்வத்த பிரதேசத்தை வசிப்பிடமாகவும், 10 வயது சிறுமியின் தாய் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை (14) கோயிலின் தீபத்திருவிழா இடம்பெற்றதாக தெரிவித்த பொலிஸார், பாதங்கள் எரிந்த நிலையில் வைத்திய உதவியை நாடாத காரணத்தினால் சுகவீனமடைந்து பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் தீக்காயங்களுக்கு சிகிச்சை பெற்றுக் கொள்ளத் தவறியதாகவும், செவ்வாய்க்கிழமை (18) தனது வீட்டில் இருந்த போது திடீரென சுகவீனமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

எனினும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.