கொள்ளையடிக்கப்பட்ட பஸ் ஒரு வாரத்தின் பின் மீட்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொள்ளையடிக்கப்பட்ட பஸ் ஒரு வாரத்தின் பின் மீட்பு!

பயாகல தியலகொட பிரதேசத்தில் கொள்ளையிடப்பட்ட பேருந்து ஒன்று கொஸ்கொட பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஆடைத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து தியலகொட பிரதேசத்தில் வீதியொன்றுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேளையில் ஒரு கும்பலால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இந்த கொள்ளைச் சம்பவம் கடந்த சனிக்கிழமை (8) இடம்பெற்றுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து பயாகல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த பஸ் காலி வீதியில் பயணித்துள்ளதாக சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி, கைவிடப்பட்ட பேருந்து கொஸ்கொட பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.