அடுத்த 48 மணி நேரத்தில் மேலுமொரு பிரபல அமைச்சர் பதவி நீக்கம் செய்ய தீர்மானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அடுத்த 48 மணி நேரத்தில் மேலுமொரு பிரபல அமைச்சர் பதவி நீக்கம் செய்ய தீர்மானம்!

அரசாங்கத்தை விமர்சித்து வருவதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்குள் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவரையும் பதவியில் இருந்து நீக்க ஜனாதிபதி  தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில அல்லது வாசுதேவ நாணயக்கார ஆகிய மூவரில் ஒருவராக இருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறியமை, அமைச்சரவைக்கு எதிராக நீதிமன்றத்திற்கு சென்றமை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்கள் இவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளமை இதற்கான காரணம் என தெரியவருகிறது.

அத்துடன் நீதிமன்றத்தில் அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை திரும்ப பெறுமாறும் இந்த அமைச்சர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வந்த இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவை ஜனாதிபதி திடீரென இன்று பதவியில் இருந்து நீக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.