கொழும்பில் பலத்த பாதுகாப்பு - பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பில் பலத்த பாதுகாப்பு - பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு!

அடுத்த வரும் நாட்களில் பண்டிகைக்காக பொது மக்கள் ஒன்று கூடுவார்கள் என்பதனால் கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள மக்களின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பில் காவல்துறை மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு சரத் வீரசேக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பொதுமக்கள் அதிகளவில் கூடும் பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், நடமாடும் சுற்றுப்பயணங்கள் மற்றும் ரோந்துகளை அமுல்படுத்துவதற்கு மேலதிகமாக திருடர்கள் மற்றும் குற்றவாளிகளை கையாள்வதற்கு அதிகமான காவல்துறை அதிகாரிகளை சிவில்களில் ஈடுபடுத்துமாறு அமைச்சர் அறிவுறுத்தினார்.

இதேவேளை, மேல் மாகாணத்தில் பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றுகிறார்களா என்பது தொடர்பில் காவல்துறையினர் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று (21) சுமார் 7285 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களில் சுகாதார விதிமுறைகளை முறையாக பின்பற்றாத 1901 பேருக்கு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சோதனை நடவடிக்கையில் 795 காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டதுடன், 2910 மோட்டார் சைக்கிள் 2640 முச்சக்கரவண்டிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.