கொரோனா மூன்றாம் அலை; குழந்தை மற்றும் கர்ப்பிணிப் பெண்களின் இறப்பு தொடர்பில் வெளியான தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா மூன்றாம் அலை; குழந்தை மற்றும் கர்ப்பிணிப் பெண்களின் இறப்பு தொடர்பில் வெளியான தகவல்!


இலங்கையில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலையின் போது 60 கர்ப்பிணிப் பெண்களும், 18 வயதுக்குட்பட்ட 89 குழந்தைகளும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த விடயம் தொடர்பில், நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் சித்திரமாலி டி சில்வா இந்த தகவலை தெரிவித்துள்ளார்.


கர்ப்பிணிப் பெண்கள் தற்போது கோவிட்க்கான பூஸ்டர் தடுப்பூசியைப் பெறலாம். கர்ப்பம் தரிப்பதற்கு முன் சினோபார்ம் அல்லது வேறு ஏதேனும் கோவிட் தடுப்பூசியைப் பெற்ற எவரும் கர்ப்ப காலத்தில் மூன்றாம் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.


இதன் மூலம் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வது கர்ப்பிணி பெண்களின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் எனவும்  குறிப்பிட்டுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.