பாகிஸ்தானில் நாளை மறுதினம் விசேட தினமாக பிரகடனம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாகிஸ்தானில் நாளை மறுதினம் விசேட தினமாக பிரகடனம்!


பாகிஸ்தான் - சியால்கொட் பகுதியில் தீவிரவாதிகளால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தியவடனவின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் கனேமுல்ல - பொல்ஹேன பொது மயானத்தில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் மதத் தலைவர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.


இதேவேளை, பிரியந்த குமார தியவடனவை நினைவு கூரும் வகையிலும், இந்த கொடூர சம்பவத்தை கண்டித்தும் பாகிஸ்தானில் நாளை மறுதினம் (10) விசேட கண்டன தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.


மேலும், இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 08 பேர் இன்று கைது செய்யப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இதன்படி, இந்த சம்பவம் தொடர்பில் 140க்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் 34 பேர் பிரதான சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


பிரியந்த குமாரவின் படுகொலை தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அஸ்கிரிய பீடாதிபதி வரக்காகொட ஸ்ரீ ஞானரதன தேரர் கடிதம் ஒன்றை அனுப்பி, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த எடுத்த நடவடிக்கைக்கு தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.