நாட்டில் ஏற்பட்ட மின் தடை; வேண்டும் என்றே செய்யப்பட்டதா?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் ஏற்பட்ட மின் தடை; வேண்டும் என்றே செய்யப்பட்டதா?


நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சாரத் தடையானது, மின் பொறியியலாளர் சங்கத்தின் நாசகார வேலையாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக மின்சார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் இன்று (03) முற்பகல் 11.30 மணி முதல் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

இந்நிலையில், மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தினர் மின்சார மீள் இணைப்பு பணிகளை வேண்டும் என்றே இழுத்தடிப்பு செய்வதாக மின்சார சபை பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

எனினும், மின்விநியோகம் சீரமைக்கப்பட்டு வருவதுடன் 400 மெகா வோட் மின்சாரம் மீள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கொழும்பில் பல பகுதிகளுக்கும் அநுராதபுரம், ஹபரணை, லக்சபான - அதுருகிரிய மற்றும் கொத்மலை - பியகம ஆகிய மின் விநியோக பாதைகளுக்கான மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.