இலங்கையிலிருந்து வெளியேறிய ஒமிக்ரோன் வைரஸ் திரிபு தொற்றாளர்- பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையிலிருந்து வெளியேறிய ஒமிக்ரோன் வைரஸ் திரிபு தொற்றாளர்- பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத்!

ஒமிக்ரோன் வைரஸ் திரிபு தொற்றிய மூவரில் ஒருவர் தற்போது இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (17) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்தபோதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட சில பி.சி.ஆர் மாதிரிகள், மேலதிக பரிசோதனைக்காக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட பின்னர் குறித்த ஒமைக்ரோன் நோயாளர் அடையாளம் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து ஆராய்ந்தபோது, அவர் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக தங்களிடம் தகவல் உள்ளதாக தெரிவித்த அவர், எனினும் அவர் எவ்வாறு வெளியேறினார் என்பது குறித்து தொடர்ந்தும் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.