கொழும்பில் நாளையதினம் மாபெரும் போராட்டத்தை நடத்த ஐக்கிய மக்கள் சக்தி முயல்கிறது ஏன் இந்த போராட்டம் ஒரு நாட்டை வளர்க்கவா? நாட்டு மக்களுக்கு நன்மை செய்யவா? இல்லை, நோயைப் பரப்பி, இந்த நாட்டை மீண்டும் ஒருமுறை நாட்டை பாதாளத்தில் தள்ளவே இந்தப் போராட்டம்.
எனவேகாவல்துறையாகிய நாங்கள் அந்தப்போராட்டத்திற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். நீதிமன்ற உத்தரவின்படி காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர். பதவி எதுவாக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரியர் அட்மிரல் கலாநிதி சரத் வீரசேகர தெரிவித்தார்.
எங்களுடன் ஒன்றிணைவதே எதிர்க்கட்சிகளின் பணியாக இருக்க வேண்டும். யார் என்ன சொன்னாலும் காவல்துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற முறையில். அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன்.
நீதிமன்ற உத்தரவு வந்தால், கண்டிப்பாக அந்த சட்டவிரோத பேரணிகளையும், சட்ட விரோத போராட்டங்களையும் தடுத்து நிறுத்துவோம்.அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்.
காவல்துறை சட்டம் ஒழுங்கை பராமரிக்கிறது.காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தால், அவர்கள் அதை கடைப்பிடிக்கின்றனர். சுகாதாரத்துறை அதிகாரிகளே நீதிமன்றத்திற்கு சென்றுள்ளனர் .இந்த மாதிரி பேரணிகளால் நோய் பரவலாம், இன்னொரு அலை வரலாம், பிறகு நாட்டு மக்களுக்கு என்ன நடக்கும், பிறகு சுயதொழில் செய்பவர்களுக்கும்,ஏனையோருக்கும் என்ன நடக்கும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
எனவேகாவல்துறையாகிய நாங்கள் அந்தப்போராட்டத்திற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். நீதிமன்ற உத்தரவின்படி காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர். பதவி எதுவாக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரியர் அட்மிரல் கலாநிதி சரத் வீரசேகர தெரிவித்தார்.
எங்களுடன் ஒன்றிணைவதே எதிர்க்கட்சிகளின் பணியாக இருக்க வேண்டும். யார் என்ன சொன்னாலும் காவல்துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற முறையில். அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன்.
நீதிமன்ற உத்தரவு வந்தால், கண்டிப்பாக அந்த சட்டவிரோத பேரணிகளையும், சட்ட விரோத போராட்டங்களையும் தடுத்து நிறுத்துவோம்.அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்.
காவல்துறை சட்டம் ஒழுங்கை பராமரிக்கிறது.காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தால், அவர்கள் அதை கடைப்பிடிக்கின்றனர். சுகாதாரத்துறை அதிகாரிகளே நீதிமன்றத்திற்கு சென்றுள்ளனர் .இந்த மாதிரி பேரணிகளால் நோய் பரவலாம், இன்னொரு அலை வரலாம், பிறகு நாட்டு மக்களுக்கு என்ன நடக்கும், பிறகு சுயதொழில் செய்பவர்களுக்கும்,ஏனையோருக்கும் என்ன நடக்கும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.