நாட்டிற்கு நல்லதோர் எதிர்காலம் - மக்கள் கடவுச்சீட்டினை பெற நீண்ட வரிசைகளில் இருப்பது, வெளிநாடுகளுக்கு சென்று நாட்டின் செழிப்பான எதிர்க்காலத்திற்கு பங்களிப்பு செய்வதற்காகவே!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டிற்கு நல்லதோர் எதிர்காலம் - மக்கள் கடவுச்சீட்டினை பெற நீண்ட வரிசைகளில் இருப்பது, வெளிநாடுகளுக்கு சென்று நாட்டின் செழிப்பான எதிர்க்காலத்திற்கு பங்களிப்பு செய்வதற்காகவே!

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இம்முறை சிறந்த வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்துள்ளார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இம்முறை முழுமையான அபிவிருத்திக்கான வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஒரு நாடு என்ற ரீதியிலும், தேசம் என்ற ரீதியிலும் சில சாதகமான அறிகுறிகள் முன்னால் இருப்பதாகவும் அவர் கூறினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கொரோனா தொற்று காரணமாக இலங்கைக்கு திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ளும் நீண்ட வரிசையில் இருப்பதும் மீண்டும் வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சிப்பதும் தாய்நாட்டிற்கு அவர்களின் பங்களிப்பை செய்ய் முயற்சிக்கவே என்று அவர் மேலும் கூறினார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.