கடந்த வாரம் கிண்ணியா படகு அனர்த்தம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தை ஒன்று இன்று (28) காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 06 வயது சிறுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மரணத்துடன், கடந்த 23ஆம் திகதி கிண்ணியா குருஞ்சாங்கேணி தடாகத்தில் இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 07 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கு முன்னர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 70 வயதுடைய ஆண், 30 வயதுடைய பெண் மற்றும் அவரது 6 வயது மகன் மற்றும் 3 1/2 வயதுடைய மகள் மற்றும் இரண்டு சகோதரிகள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். (யாழ் நியூஸ்)