கிண்ணியா படகு அனர்த்தம்: மாணவர்கள் உட்பட பலர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கிண்ணியா படகு அனர்த்தம்: மாணவர்கள் உட்பட பலர் பலி!

திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் உட்பட 06 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.

திருகோணமலை, கிண்ணியா, குரிஞ்சாக்கேணி பயணிகள் படகு கவிழ்ந்ததில், ஆறு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 11 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

சம்பவத்தின் போது படகில் மாணவர்களை ஏற்றிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் போனவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
(யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.