தனியார் வாகனங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்! -பொலிஸ்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தனியார் வாகனங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்! -பொலிஸ்


தனியார் வாகனங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என இலங்கை காவல்துறை இன்று (23) தெரிவித்துள்ளது.


முகக்கவசம் அணியாத தனியார் வாகனங்களில் பயணிக்கும் நபர்களை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை ஒன்றை பொலிஸார் இன்று முதல் ஆரம்பித்துள்ளனர்.


பொலிஸாரின் கூற்றுப்படி, மோட்டார் வாகனங்களில் பயணம் செய்பவர் நெருங்கிய உறவினர் இல்லை என்றால் அவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.


அதேநேரம், நெருங்கிய உறவினர்களுடன் பயணம் செய்பவராக இருந்தாலும் ஓட்டுநர் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.


இருப்பினும், உறவினரின் அடையாளம் உறுதி செய்யப்பட்டவுடன் வாகனம் ஓட்டிச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.


பொலிஸாரினால் சோதனைக்கு உட்படுத்தும் அசௌகரியத்தை தவிர்க்கும் வகையில், வாகன ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் முகக்கவசம் அணிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.