நாட்டில் இறக்குமதி செய்யப்படும் 433 பொருட்களுக்கு கட்டுப்பாடு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் இறக்குமதி செய்யப்படும் 433 பொருட்களுக்கு கட்டுப்பாடு!

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் நோக்கில் மரக்கறிகள், பழங்கள் மற்றும் விவசாயப் பொருட்கள் உட்பட கிட்டத்தட்ட 433 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக சமுர்த்தி, வீட்டுப் பொருளாதாரம், நுண் நிதி, சுயதொழில் மற்றும் வர்த்தக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க அறிவித்துள்ளார்.

ஓடுகள், கிரானைட்கள், மரப் பொருட்கள், பிளாஸ்டிக், முகக்கவசங்கள், சைக்கிள்கள், சவர்க்காரம், வெங்காயம் போன்ற சிறிய பொருட்களும் இறக்குமதிக் கட்டுப்பாடுகளின் கீழ் உள்ளடங்குவதாக ராஜாங்க அமைச்சர் சேமசிங்க நேற்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட பிரதமரிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேற்கூறிய பொருட்களை இறக்குமதி செய்வதற்காக அரசாங்கம் 2018 ஆம் ஆண்டில் 2.2 பில்லியன் அமெரிக்க டொலர்களையும், 2019 ஆம் ஆண்டில் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களையும் செலவிட்டுள்ளதாக தெரிவித்த எம்.பி சேமசிங்க, தற்காலிக கட்டுப்பாடுகளை விதித்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 1.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை சேமிக்க முடிந்துள்ளதாக தெரிவித்தார்.

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக உள்ளுர் சந்தையில் வாகனப் பற்றாக்குறையை குறைப்பதற்காக உள்ளுர் வாகனங்களை இணைக்கும் தொழிற்சாலைகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சேமசிங்க மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பாக பதினொரு முதலீட்டாளர்கள் ஏற்கனவே அரசாங்கத்துடன் கலந்துரையாடியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தற்காலிக இறக்குமதி தடையின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள பல பொருட்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கு கைத்தொழில் அமைச்சு பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.