அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களுக்கு மேலதிகமாக மாதிவல பாராளுமன்ற வீட்டுகட்டிடத் தொகுதிகளையும் பயன்படுத்தி வருவதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், தற்போது அமைச்சின் உத்தியோகபூர்வ இல்லங்களை பயன்படுத்தும் அமைச்சர்களின் பட்டியலை வழங்குமாறு பாராளுமன்றத்தின் தலைவர்கள் பொது நிர்வாக அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பட்டியல் கிடைத்தவுடன், பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இல்லங்களை பெற்று, குறித்த இல்லங்களுக்கு குடியிருப்புக்கு சென்ற அமைச்சர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)