10 அமைச்சர்களினால் தலா இரு உத்தியோகபூர்வ இல்லங்கள் அபகரிப்பு!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

10 அமைச்சர்களினால் தலா இரு உத்தியோகபூர்வ இல்லங்கள் அபகரிப்பு!!!

பத்து அமைச்சர்கள் தலா இரண்டு உத்தியோகபூர்வ இல்லங்களை கைப்பற்றியுள்ளதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களுக்கு மேலதிகமாக மாதிவல பாராளுமன்ற வீட்டுகட்டிடத் தொகுதிகளையும் பயன்படுத்தி வருவதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், தற்போது அமைச்சின் உத்தியோகபூர்வ இல்லங்களை பயன்படுத்தும் அமைச்சர்களின் பட்டியலை வழங்குமாறு பாராளுமன்றத்தின் தலைவர்கள் பொது நிர்வாக அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பட்டியல் கிடைத்தவுடன், பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இல்லங்களை பெற்று, குறித்த இல்லங்களுக்கு குடியிருப்புக்கு சென்ற அமைச்சர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.