உயிரிழந்த சிறுவன் சிலாபம், மஹாவெவ, இஹல மஹாவெவ பகுதியைச் சேர்ந்த தியாகு ஆராச்சிலாகே இடுசர சஞ்சீவ (6) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குழந்தையும் அவரது குடும்பத்தினரும் இஹல மஹாவெவ பிரதேசத்தில் வசிப்பவர்களாக இருந்தாலும் அண்மையில் ஆனமடுவ உரியாவ கிராமத்தில் விவசாயம் செய்வதற்காக காணி ஒன்றை கொள்வனவு செய்து அப்பகுதிக்கு விவசாயம் செய்ய வந்துள்ளனர்.
அப்பகுதியில் உள்ள சிறிய குடிசையில் இருந்த குழந்தை மழை ஓய்ந்த நிலையில் முற்றத்தில் மற்றுமொரு குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த போது மின்னல் தாக்கியதில் மயங்கி விழுந்து ஆனமடுவ ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து குழந்தை புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த குழந்தையின் பிரேத பரிசோதனை புத்தளம் ஆதார வைத்தியசாலையில் நடத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆனமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)