கிரான்பாஸ், கஜீமா தோட்டம் பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சகோதரர்கள் இருவருக்கு இடையில் இடம்பெற்ற பணப்பிரச்சினை காரணமாகவே அண்ணன் தம்பியைக் கொலை செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தில் 26 வயதுடைய ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார் என காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் 28 வயதுடைய சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் கிரான்பாஸ் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.