உடன் பிறந்த சகோதரனை கொலை செய்த அண்ணன்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உடன் பிறந்த சகோதரனை கொலை செய்த அண்ணன்!

கிரான்பாஸ் பகுதியில் நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகத் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கிரான்பாஸ், கஜீமா ​தோட்டம் பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சகோதரர்கள் இருவருக்கு இடையில் இடம்பெற்ற பணப்பிரச்சினை காரணமாகவே அண்ணன் தம்பியைக் கொலை செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தில் 26 வயதுடைய ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார் என காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் 28 வயதுடைய சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கிரான்பாஸ் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.