டெங்கு பரவும் சூழலை வைத்திருப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

டெங்கு பரவும் சூழலை வைத்திருப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!


மினுவாங்கொடை பிரதேசத்தில் டெங்கு நோய் பரவும் வகையில் சூழலை சுத்தப்படுத்தாமல் வைத்திருக்கும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, மினுவாங்கொடை பத்தண்டுவன பிரதேசத்திற்குப் பொறுப்பான பொது சுகாதாரப் பரிசோதகர் பனாகொட தெரிவித்தார்.


மினுவாங்கொடை சுகாதார சேவைப் பிரிவிற்குட்பட்ட வீடுகள், உணவகங்கள் மற்றும்  நிறுவனங்கள் ஆகியவற்றில் இந்த வாரம் முதல் டெங்கு நுளம்பு பரவுவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும், இவ்வாறு கவனயீனமாக இருப்பவர்களுக்கு முதற்கட்டமாக அடுத்த வாரம் முதல் சிவப்பு அறிவித்தல் அனுப்பப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


கொவிட் தொற்றுக்கு மத்தியில், நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை  காரணமாக, டெங்கு நோய் பரவும் ஆபத்து காணப்படுவதாகவும், இதனால் எந்நேரமும் தத்தமது வீட்டுச் சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் மினுவாங்கொடை பிரதேச மக்களை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.


மினுவாங்கொடை சுகாதாரப் பிரிவிற்குட்பட்ட கல்லொழுவை, பொல்வத்தை, மிரிஸ்வத்தை, ஜாபாலவத்தை, பத்தண்டுவன மற்றும் புருலப்பிட்டிய பகுதி வாழ் மக்கள், டெங்கு நுளம்பு பரவும் விடயத்தில் மிக அவதானமாக நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டிக்கொண்டார்.


ஐ. ஏ. காதிர் கான்

கம்பஹா மாவட்ட நிருபர்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.