மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்!


மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாழடைந்த இடத்துக்கு அழைத்துச் சென்று தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படும் அரச புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு, அத்தனகல்ல பதில் நீதவான் சமித்த லால் கொடிசிங்க, இன்று (31) பிற்பகல் உத்தரவிட்டார்.


மாவனெல்லை பிரதேசத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


பஸ்யாலையில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாழடைந்த இடத்துக்கு  அழைத்துச் சென்ற அவர், குறித்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.


பொலிஸ் அவசர இலக்கத்துக்கு கிடைத்த தகவலையடுத்து சந்தேக நபர் நிட்டம்புவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


முறைப்பாட்டில் முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த பதில் நீதவான், சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.