கடவுச்சீட்டு பெறுவோர்களுக்கான விசேட அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கடவுச்சீட்டு பெறுவோர்களுக்கான விசேட அறிவிப்பு!

கொரோனா பரவல் காரணமாக குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களில் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான விண்ணப்பதாரிகளுக்கு மாத்திரமே கடவுச் சீட்டுக்கள் வழங்கப்படும் எனக் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

அவசர தேவைகளுள்ள விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே கடவுச்சீட்டு வழங்கப்படும் எனவும், அதற்காக குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தின் இணையத்தளம் ஊடாக, திகதியை முன்பதிவு செய்தபின் அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள அலுவலகத்திற்கு சென்று கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் குறிப்பிட்டார்.




அத்தகைய முன்பதிவு இல்லாத விண்ணப்பதாரிகள் அலுவலக வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

முன்பதிவுகளை செய்துக்கொள்ள பின்வரும் இணையத்தள முகவரிக்கு பிரவேசிக்க முடியும். eservices.immigration.gov.lk பத்தரமுல்லையில் உள்ள பிரதான அலுவலகத்தோடு தொடர்புகொண்டு விபரங்களை பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், 0707101060 மற்றும் 0707101070 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.