விரைவில் நாடு முழுதும் மீண்டும் தொடர் மின்தடை?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

விரைவில் நாடு முழுதும் மீண்டும் தொடர் மின்தடை?


இலங்கை மின்சார சபை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது குறித்து பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருக்கின்றனர்.


தேசிய சொத்துக்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் அரசாங்கத்தின் செயற்பாட்டினை எதிர்த்தே வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டு வருவதாக மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களின் இணைப்பாளரான ரஞ்ஜன் ஜயலால் தெரிவித்தார்.


கண்டியில் நேற்று (05) ஊடகங்களுக்கு கருத்துவெளியிட்ட போதே அவர் இந்த தகவலைக் கூறினார்.


இதேவேளை நேற்றைய தினத்தில் நாட்டின் பல இடங்களில் மின்தடை ஏற்பட்ட நிலையில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் மின்சார சபை ஊழியர்கள் குதித்தால் மீண்டும் நாடு மின்தடையை எதிர்கொள்ள நேரிடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.