இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி மற்றும் புனித தோமஸ் கல்லூரியின் முன்னாள் தலைவருமான உபேகா பெர்னாண்டோ தனது 41 ஆவது வயதில் காலமானார்.
உபேகா பெர்னாண்டோ 1997-98 முதல் 2002-03 வரை சிங்கள விளையாட்டுக் கழகத்திற்காக (SSC) விளையாடிய முன்னாள் இலங்கை முதல்தர துடுப்பாட்ட வீரர் ஆவார்.
அவர் 1998-99 இல் இந்தியாவுக்கு எதிரான இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிக்கு தலைவராக இருந்தார்.
இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த உபேகா பெர்னாண்டோ இன்று காலமானார்.
உபேகா பெர்னாண்டோவின் இறுதிக் கிரியைகள் நாளை (27) கண்டியில் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்தன. (யாழ் நியூஸ்)