புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியானது! முழு விபரம் தமிழில்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியானது! முழு விபரம் தமிழில்!


கொவிட் அச்சுறுத்தலால் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கடையிலான பயணக்கட்டுப்பாடுகள் திங்கட்கிழமை முதல் நீக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் நவம்பர் 01ஆம் திகதி முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை பின்பற்ற வேண்டிய புதிய சுகாதார வழிகாட்டல்கள் இன்றையதினம் (30) சுகாதார சேவைகள் பணிப்பபாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ளன.


அதற்கமைய கல்விப் பொதுத் தராதர உயர்தரம் மற்றும் சாதாரணதர மாணவர்களுக்கான கற்பித்தலை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 


எனினும் அவற்றை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படக் கூடிய தினத்தை கல்வி அமைச்சு தீர்மானிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டள்ளது. 


குழந்தை பராமரிப்பு நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 


எனினும் உயர்தரம் மற்றும் சாதாரணதர மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புக்களை 50 சதவீத மாணவர்களின் பங்குபற்றலுடன் நவம்பர் 16 ஆம் திகதிக்கு பின்னர் ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


பாலர் பாடசாலைகளை 50 சதவீத மாணவர்களின் பங்குபற்றலுடன் ஆரம்பிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. 


உயர் கல்வி நிறுவனங்களை சுகாதார விதிமுறைகளுக்கமைய ஆரம்பிக்க முடியும். 


பயிற்சி நிலையங்கள் அல்லது நிறுவனங்களை 50 சதவீதமானோரின் பங்கேற்புடன் ஆரம்பிக்க முடியும்.


நீதிமன்ற நடவடிக்கைகளையும் சுகாதார விதிமுறைகளுக்கமைய முன்னெடுத்துச் செல்ல முடியும். 


சினிமா திரையரங்குகளை 25 சதவீதமானோரின் பங்குபற்றலுடன் நடத்திச் செல்ல முடியும். 


உடற்பயிற்சி நிலையங்களை 30 சதவீதமானோரின் பங்கேற்புடன் நடத்திச் செல்ல முடியும். விளையாட்டு செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


திறந்த வெளிகளில் ஏற்பாடு செய்யப்படும் திருமண வைபவங்களுக்கு அதிகபட்சம் 150 பேரை அனுமதிக்க முடியும். 


மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்படும் வைபவங்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கு அதிகபட்சம் 100 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 


மரண சடங்குகளில் 20 பேர் பங்குபற்றலாம். மத வழிபாட்டு ஸ்தளங்களில் கூட்டு பிரார்த்தனைக்கு அனுமதி வழங்கப்படவில்லை.


-எம்.மனோசித்ரா



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.