விமான நிலையத்தில் 7 கோடி பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களுடன் 25 வயதுடைய நபர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

விமான நிலையத்தில் 7 கோடி பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களுடன் 25 வயதுடைய நபர் கைது!


கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 7 கோடி ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளை கடத்த முயன்ற ஒருவரை கைது செய்யதுள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான சுந்த சில்வா தெரிவித்தார்.


விமான நிலைய துப்புரவுப் பிரிவில் பணிபுரியும் 25 வயதுடை குறித்த நபர், இன்று (19) அதிகாலை சுங்கத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த அந்த நபரிடம் நடத்திய சோதனையின் போது ​​4 கிலோ 848 கிராம் நிறையுடைய 48 தங்க பிஸ்கட்டுகள் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்த ஊடகப் பேச்சாளர், அவற்றின் பெறுமதி 7 கோடி ரூபாய் என்றும் குறிப்பிட்டார்.


இவ்விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.