ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெற்ற சர்வதேச இராணுவ குத்துச்சண்டை போட்டியில் இலங்கை விமானப்படையைச் சேர்ந்த கயானி களுஆராச்சி 75 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
இவ்வாறான சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இலங்கை வீரர் ஒருவர் வெண்கலப் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறை என இலங்கை விமானப்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)