சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (04) இந்த மரண எண்ணிக்கைகள் உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 10,140 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் உயிரிழந்தவர்களில் 96 ஆண்களும், 93 பெண்களும் அடங்குவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், நாட்டில் கொரோனா தொற்றுக்கு புதிதாக மேலும் 2,564 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது நாட்டில் இதுவரை தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டோரின் எண்ணிக்கையை ஆக 462,023 அதிகரித்துள்ளது.
இதில், 67,515 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.