இத்தாலியில் நடைபெற்ற G-20 சர்வமத மாநாட்டில் பங்கேற்பதற்காக உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று அதிகாலை சிங்கப்பூர் வழியாக நாடு திரும்பியுள்ளார் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பிரதமருடன் பயணமாகிய அவரது குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதன்படி வெளிவிவகார அமைச்சின் செயலாளர், அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே மற்றும் பிற பிரதிநிதிகள் குழுவும் இத்தாலி பயணத்தை முடித்துவிட்டு திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில் நாடு திரும்பிய பிரதமர், அநுராதபுரம் மற்றும் வெலிக்கடை சிறைகளில் மதுபோதையில் சென்று அட்டகாசம் புரிந்த சிறைச்சாலைகள் புனர்வாழ்வு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரதமர் நாடு திருப்பியதும் கட்சியின் மத்திய செயற்குழு கூடி உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளும் என கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சாகர காரியவசம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பிரதமருடன் பயணமாகிய அவரது குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதன்படி வெளிவிவகார அமைச்சின் செயலாளர், அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே மற்றும் பிற பிரதிநிதிகள் குழுவும் இத்தாலி பயணத்தை முடித்துவிட்டு திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில் நாடு திரும்பிய பிரதமர், அநுராதபுரம் மற்றும் வெலிக்கடை சிறைகளில் மதுபோதையில் சென்று அட்டகாசம் புரிந்த சிறைச்சாலைகள் புனர்வாழ்வு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரதமர் நாடு திருப்பியதும் கட்சியின் மத்திய செயற்குழு கூடி உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளும் என கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சாகர காரியவசம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.