நள்ளிரவில் நாடு திரும்பிய பிரதமர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நள்ளிரவில் நாடு திரும்பிய பிரதமர்!

இத்தாலியில் நடைபெற்ற G-20 சர்வமத மாநாட்டில் பங்கேற்பதற்காக உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று அதிகாலை சிங்கப்பூர் வழியாக  நாடு திரும்பியுள்ளார் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரதமருடன் பயணமாகிய அவரது குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதன்படி வெளிவிவகார அமைச்சின் செயலாளர், அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே மற்றும் பிற பிரதிநிதிகள் குழுவும் இத்தாலி பயணத்தை முடித்துவிட்டு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் நாடு திரும்பிய பிரதமர், அநுராதபுரம் மற்றும் வெலிக்கடை சிறைகளில் மதுபோதையில் சென்று அட்டகாசம் புரிந்த சிறைச்சாலைகள் புனர்வாழ்வு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரதமர் நாடு திருப்பியதும் கட்சியின் மத்திய செயற்குழு கூடி உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளும் என கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சாகர காரியவசம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.