சாலை பாதுகாப்பு நிதிக்கு பங்களிப்பதற்காக மோட்டார் வாகன காப்பீடுகளுக்கு விதிக்கப்படும் 1 சதவீத வரி எதிர்வரும் அக்டோபர் 1 ஆம் திகதி முதல் 2 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான அரசிதழ் அறிவிப்பு 2021 செப்டம்பர் 17 வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சாலை பாதுகாப்புக்கான தேசிய கவுன்சிலின் கீழ் சாலை பாதுகாப்பு நிதி நிறுவப்பட்டது.
மோட்டார் வாகன காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கப்படும் 1 சதவீத வரி, சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனங்களால் சாலை பாதுகாப்பு நிதிக்கு மாதந்தோறும் வைப்பிலிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)