காலி மாநகர சபையின் சமூக அபிவிருத்தி அதிகாரி 45 கோவிட் தடுப்பூசி அட்டைகளை வைத்திருந்ததாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் ஜூலை 28 அன்று கோவிட் தடுப்பூசி திட்டத்தில் பங்கேற்றுள்ளதோடு திட்டத்திற்குப் பிறகு அட்டைகளை கையளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அட்டைகள் சுகாதார மருத்துவ அதிகாரியால் கையொப்பமிடப்பட்டுள்ளதோடு, அட்டைகளை ஏன் இவர் வைத்துக்கொண்டிருந்தார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)
அவர் ஜூலை 28 அன்று கோவிட் தடுப்பூசி திட்டத்தில் பங்கேற்றுள்ளதோடு திட்டத்திற்குப் பிறகு அட்டைகளை கையளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அட்டைகள் சுகாதார மருத்துவ அதிகாரியால் கையொப்பமிடப்பட்டுள்ளதோடு, அட்டைகளை ஏன் இவர் வைத்துக்கொண்டிருந்தார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)